புர்கா தடை குறித்து பாகிஸ்தான் தூதுவர் அமைச்சர் தினேசுடன் பேச்சு
புர்காவுக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பேச்சு நடத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று இன்று செவ்வாய்க்க்கிழமை -16-இடம்பெற்றுள்ளது.
இதன்போது, புர்கா மற்றும் நிகாபிற்கு தடை விதிப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு, பிரதமர் இம்ரான் கானின் அண்மைய இலங்கை விஜய செயற்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படுவதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் நேற்று (15) அதிருப்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியில் உள்ளவர்களுக்கு மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை.
ReplyDelete