Header Ads



பொலிஸ் உத்தியோகத்தர் ஈவிரக்கமின்றி, தாக்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் - யோசித


லொறி சாரதியொருவரை பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் நடுவீதியில் வைத்து மோசமாக தாக்கியமைக்கு யோசித ராஜபக்ச கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் விபத்தொன்று தொடர்பில் மும்முரமான வீதியொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் நபர் ஒருவரை ஈவிரக்கமின்றி தாக்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீருடையணிந்தவர்கள் பொதுமக்களை பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளனர் அவர்கள் பொதுமக்களிற்கு அச்சுறுத்தலாக விளங்ககூடாது என தெரிவித்துள்ள யோசித இந்த சம்பவம் குறித்து நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக நான் அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளேன் எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.