பலவந்த தகனம் என்பதை நீக்குமாறு, ஜெனீவாவில் இலங்கை பிடிவாதம்
உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கொள்கை கைவிடப்பட்டுள்ளதால், தீர்மானத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அகற்றவேண்டும் என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சிஏ சந்திரப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார். கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இலங்கை தொடர்பான முதன்மை குழுவிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கை இராணுவமயப்படுத்தல் குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
ஓய்வுபெற்ற இராணுவஅதிகாரிகளுக்கு அரசதுறையில் இணைந்துகொள்வதற்கான உரிமையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை நிலவரம் மோசமடைவது குறித்து முன்கூட்டிய ஆரம்ப எச்சரிக்கைகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள சந்திரபெரும ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் சுதந்திரமானதில்லை பக்கச்சார்பானது எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment