புர்காவை தடை செய்வதில் உடனடி, முடிவுகள் எதனையும் எடுக்கப்போவதில்லை - கெஹெலிய
- TL -
புர்கா நிஹாப்பினை தடை செய்யும் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ள அரசாங்கம் எனினும் இந்த விடயத்தில் உடனடி முடிவுகள் எதனையும் எடுக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.
கலந்தாலோசனைகளை மேற்கொண்டு கருத்தொருமைப்பாட்டுடன் இதனை முன்னெடுப்போம் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த விடயம் குறித்து தீவிரமாகஆராயப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே புர்காவை தடை செய்வது குறித்து ஆராயப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உத்தேச புர்கா தடையை ஜெனீவாவுடன் தொடர்புபடுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். தினக்குரல்
Post a Comment