இரணைத்தீவில் ஜனாஸா அடக்கமா..? கடுமையாக விமர்சித்துள்ள ஹக்கீம்
கொரோனாவினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் நல்லடக்கம் செய்யலாமென்ற தீர்மானத்தை மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் இதுபற்றி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
@Rauff_Hakeem
"உடல் (ஜனாஸா) களை இரணைத்தீவுக்கு அப்புறப்படுத்த எத்தனிக்கின்றனர். தவறான கதைகளைப் புனைந்துரைத்து, நெடுகிலும் அவர்கள் செய்வதே சரி என்று நிரூபிக்கவே விரும்புகின்றனர். நம்பிக்கை இழந்து , அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள சமூகத்தை துன்புறுத்துவதில் அவர்கள் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. பரிதாபகரமான இனவெறி தலைவிரித்தாடுகின்றது".
Mr. Hakeem,
ReplyDeletefight for the compensation for those who affected.