பாத்திமா றிஸ்காவின் பிரேத பரிசோதனை இன்று
மீகஹவத்தை - தெல்கொட - கந்துபொட பகுதியில் தோஷத்தை நீக்குவதாக கூறி பிரம்பால் தாக்கப்பட்ட நிலையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் (27) உயிரிழந்தார்.
இதன்போது சிறுமியின் தாய் மற்றும் பூசகர் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் இன்று (01) மஹர நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
சிறுமிக்கு தோஷம் இருப்பதாக கூறி பூசகர் மற்றும் அவரது தாய் ஆகியோர் பிரம்பால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று (01) ராகமை பொது வைத்தியசாலையில் நடைபெற உள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
Post a Comment