Header Ads



நான் எனது கடமையை செய்யவில்லை என, தெரிவிப்பவர்கள் பைத்தியக்காரர்கள் - சீற்றத்துடன் மைத்திரி வீடியோ



உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து தனக்கு முன்கூட்டிய விபரங்கள் எச்சரிக்கை எதுவும் கிடைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் அதிகாரிகளிற்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்தன என அவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு தகவல்கள் குறித்து எனக்கு தெரியவந்திருந்தால் நான் ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்திருப்பேன் தேவாலயங்களை பாதுகாத்திருப்பேன்  தற்கொலை குண்டுதாரிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து அனர்த்தத்தை தவிர்த்திருப்பேன் எனவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தபோதிலும் நான் எனது கடமையை செய்யவில்லை என தெரிவிப்பவர்கள் பைத்தியக்காரர்கள் எனவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலின்பின்னர் எனது அமைச்சர்களே போலியான தகவல்களை பரப்பினார்கள் சமூகம் அதனை ஏற்றுக்கொண்டது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இஸ்லாதியதீவிரவாதிகள் மீண்டும் அவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளமாட்டார்கள்என  எவராலும் தெரிவிக்க முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.