Header Ads



இலங்கை தொடர்பில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் விவாதம்


- TM -

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் தொடர்பான பிரித்தானியாவின் வகிபாகம் குறித்த பிரேரணையொன்று மீது, பொது விவாதமொன்றை, பிரித்தானிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் நடத்தவுள்ளதாக, அந்நாட்டுப் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களான சியோபஹைன் மக்டொனாஹ், எலியொட் கொல்பேர்ன், சேர் எட்வேர்ட் டேவி ஆகியோரே விவாதத்தை முன்னெடுக்கச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.