Header Ads



இந்திய அரசாங்கம் இலங்கை தொடர்பில் இக்கட்டான நிலையில் உள்ளது - கொலம்பகே


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடாது என , உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் ஜெனரல் மொஹான் சமரநாயக்கவுடன் இணையத்தளம் ஊடாக இன்று -17- நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.

வௌிவிவகார அமைச்சின் செயலாளர் கூறுவதைப் போன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.

எனினும், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில், இந்திய அரசாங்கம் இலங்கை தொடர்பில் இக்கட்டான நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.