Header Ads



மனைவியை கொன்று தீ வைத்து எரித்த கணவன், அதே தீயில் குதித்து தற்கொலை - கம்பளையில் அதிர்ச்சி


தனது மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்து உடலுக்கு தீ மூட்டிய  கணவன், அதே தீயில் தானும் குதித்து உயிர்நீத்த சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கம்பளை-அங்குருமல்ல பகுதியில் நேற்று காலை 9.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேற்படி தம்பதியினர் ஒரே காணியில் வெவ்வேறாக வீடு கட்டி வசித்து வந்துள்ள நிலையில், இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இவ்வாறு கணவன் தனது மனைவியை கொலை செய்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 57 வயதானவர் எனவும் உயிரிழந்த ஆண் 68 வயதானவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவராலும் விவாகரத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கம்பளை காவல்நிலையத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

No comments

Powered by Blogger.