Header Ads



புற்று நோய் ஏற்படுத்தக்கூடிய, இரசாயனம் கலந்த எண்ணெய் - எச்சரிக்கிறார் விஜயதாச


புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய இரசயானப் பொருட்கள் அடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தையில் காணப்படுவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் புற்று நோய் ஏற்படுத்தக் கூடிய இரசாயனப் பொருட்கள் அடங்கியிருப்பதனை சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சுகாதார அமைச்சினால் நச்சுப் பொருட்கள் காணப்படுவதாக உறுதி செய்யப்பட்ட சுமார் 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த தேங்காய் எண்ணெய் பயன்பாட்டுக்கு உதாவது எனவும் மக்கள் இந்த எண்ணெயை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் விஜயதாச ராஜபக்ச கோரியுள்ளார்.


No comments

Powered by Blogger.