வீதியில் ஓடுகையில், தீப்பிடித்து எரிந்த வேன்
பாணந்துறை -ஹொரணை வீதியில் பயணித்த வேன் ஒன்று இன்று -31- பிற்பகல் வாகட பிரதேசத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த வேன் பண்டாரகமவிலிருந்து பாணந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வேனின் பின்புறத்தில் தீப்பிடித்துள்ளதாக சாரதிக்கு தகவல் கொடுத்ததாக பாணந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
துரிதமாக செயற்பட்ட சாரதி வேனை வீதியோரமாக நிறுத்திவிட்டு வேன் முழுதும் தீப்பிடிப்பதற்கு முன்னதாக மற்றொரு நபருடன் அதிலிருந்து குதித்துள்ளார்.
பின் மொரட்டுவ மாநகர தீயணைப்பு படையினர் தீயை அணைத்துள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேன் தீப்பிடித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பாணந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண் டுள்ளனர். தினக்குரல்
Post a Comment