குடும்ப அரசியலை வெறுக்கிறேன் - எனது மகன் தகுந்த நேரத்தில் அரசியலுக்குப் பிரவேசிப்பார் - சந்திரிகா
தனது மகன் தகுந்த நேரத்தில் அரசியலுக்குப் பிரவேசிப்பார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளமொன்றில் நடத்தப்பட்ட நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சந்தர்ப்பத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகள் அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்கின்ற புதுச்சிந்தனைக்குள் பிரவேசிக்கின்ற சந்தர்ப்பத்திலேயே அது நிகழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் குடும்ப அரசியலை தாம் வெறுப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார். IBC
Post a Comment