Header Ads



விடுமுறை பெறாத ஆசிரியையை வீடு சென்று கௌரவித்த மற்றுமொரு பாடசாலை அதிபர்


(எச்.எம்.எம்.பர்ஸான்)

சர்வதேச மகளிர் தினமான இன்று (8) ஆசிரியை ஒருவரை அவரது வீடு சென்று பாடசாலை அதிபர் ஒருவர் கௌரவித்த சம்பவம் இன்று இடம்பெற்றது.

வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தில் கடமை புரியும் ஆசிரியை எம்.ஏ.எப்.தஸ்லீமா கடந்த மூன்று வருடங்களாக விடுமுறை பெறாமல் சேவையாற்றி வருகிறார்.

இதனை அறிந்து கொண்ட அப் பிரதேசத்திலுள்ள ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் குறித்த ஆசிரியையின் வீடு சென்று வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து ஆசிரியை தஸ்லீமாவின் சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி வைத்தார்.

1 comment:

  1. The Prophet, peace and blessings be upon him, said, “Whoever does not thank people has not thanked Allah.” Abu Dawood
    جزاكم اللهم خيرا

    ReplyDelete

Powered by Blogger.