Header Ads



கொரோனாவால் இன்று 6 பேர் மரணம் - மொத்தம் 544 ஆகியது


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது. 

பொல்கஹவெல பிரதேசத்தை சேர்நத் 70 வயதுடைய ஆண் ஒருவரும், சுதுஹும்பொல பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும், புறக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 96 வயதுடைய பெண் ஒருவரும், கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் சிலாவதுர பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.