Header Ads



கோர விபத்து நடந்து 5 நாள்களின் பின், ஆய்வு செய்யும் அதிகார சபை


பசறையில் கடந்த 20ஆம் திகதி பஸ் விபத்து இடம்பெற்ற வீதியை, இன்று -25- ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த வீதியில் சரிந்துள்ள பாறையை அகற்றுவது தொடர்பில், அதனை சூழவுள்ள இடங்களை பரிசோதிக்கவுள்ளதாகவும் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேசிய கட்டட ஆய்வு நிலையத்துடன் இணைந்தே இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார, அந்த பாறையை அகற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதேப்போல் குறித்த வீதியில் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள மண்சரிவு, கற்பாறைகள் சரிந்து விழுதல் தொடர்பிலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.