55 நாள் குழந்தை கொரோனாக்கு வபாத் - ஜனாஸாவை அடக்க துரித ஏற்பாடு
கொரோனா தொற்றினால் நேற்று 05.03.2021 கொழும்பு லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் சிபானா என்ற குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
பிறந்து 55 நாட்களே ஆன குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் ஜனாஸா, விரைவில் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அலி சாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
Seyed Ali Zahir Moulana
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ
பாலகி சிபானா! 55 நாள் பிஞ்சு குழந்தை துரதிர்ஷ்டவசமாக கோவிட் -19 தொற்றுக்குள்ளாகி நேற்று மரணித்துள்ளார்.
குழந்தைகளான ஷெய்க் மற்றும் முகம்மதுவைப் போலல்லாமல், இன்று ஒட்டமாவடியில் அவரது உடலை கொண்டு வந்து அடக்கம் செய்வதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவிப்பது மிகுந்த நிம்மதியாகவும் ஆறுதலாகவும் உள்ளது.
Alhamthulillah
ReplyDelete