டேம் வீதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான, பாவனைக்கு உதவாத முகப்பூச்சுக்கள் பிடிபட்டன
கொழும்பு - டேம்வீதி பிரதேசத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 50 இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான பாவனைக்கு உதவாத ஒரு தொகை முகப்பூச்சுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவை பாகிஸ்தான், கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என தகவல்கள் கிடைத்துள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக இந்த முகப்பூச்சுகளை அவர் விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Post a Comment