Header Ads



இலங்கைக்கு சொந்தமான படகு 300 கிலோ ஹெரோயினுடனும், ஆயுதங்களுடனும் பிடிபட்டது


துப்பாக்கிகள், ரவைகள் உட்பட பெருமளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த இலங்கைக்கு சொந்தமான 3 படகுகள், இந்திய கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மினிகோய் (Minicoy) என்ற தீவிற்கு அருகில் அந்த படகுகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

இந்த படகுகளில் இருந்து 5 ஏ.கே 47 ரக துப்பாக்கிகளும், ரவைகளும், சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.

மினிகோய் தீவிற்கு அருகில் அமைந்துள்ள லட்சத்தீவிற்கு அண்மித்த பகுதியில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் போதைப்பொருட்களுடன் மேற்படி 3 இலங்கை படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இதேவேளை படகுகளின் மூலம் கொண்டுவரப்பட்ட 260 கிலோகிராம் போதைப்பொருட்கள் கடலில் கைவிடப்பட்டிருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த படகுகளில் பயணித்த 6 இலங்கையர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.