Header Ads



அசாத் சாலிக்கு எதிராக 3 பௌத்த, அமைப்புக்கள் இன்று CID யில் முறைப்பாடு


இஸ்லாமிய சட்டத்தை எவர் மாற்றியமைத்தாலும் தாங்கள் மாற்றப்போவதில்லை என  தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய சட்டத்திட்டங்களில் உள்ளவற்றுக்கே நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்.

அதனைவிடுத்து, அரசாங்கத்தின் சட்ட திட்டங்களை பொருட்படுத்த அவசியமில்லை என அசாத் சாலி தெரிவித்தார்.

அவரின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மைத்திரிநிகாயிக்க பிக்குகள் ஒன்றியம், எமது மக்கள் சக்தி என்பன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளன.

இதேநேரம், பிவித்துறு ஹெல உறுமய இன்று காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

No comments

Powered by Blogger.