Header Ads



3 வது நாளாக ஜனாஸா அடக்கம்செய்வது தொடருகிறது - இன்று மதியம் 2 மணிவரை 4 உடல்கள் அடக்கம்


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் கடந்த இரண்டு நாட்களில் இருபது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த இரு தினங்களில் கொரோனாவினால் மரணித்தவர்களின் இருபது (20) ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று மூன்றாவது நாளாகவும் அடக்கம் செய்யப்படும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.

கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன் சனிக்கிழமை பதினொரு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 02 மணிவரை நான்கு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் 

இன்று மாலையும் ஜனாஸாக்கள் வரவுள்ளதாக கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் மையவாடியில் கடமையாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.