Header Ads



மேல் மாகாண சகல பாடசாலைகளினதும் அனைத்து, தர வகுப்புக்களும் மார்ச் 29 ஆரம்பிக்கப்படும்


மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர வகுப்புக்களும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில், மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர வகுப்புக்களையும் ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்க தீர்மானித்திருப்பதாக கூறினார். 

மேல் மாகாண அரச பாடசாலைகளில் 5, 11, 13 தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 

ஏனைய தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.