Header Ads



இலங்கை கிரிக்கெட் அணி உலக கிண்ணத்தை சுவீகரித்து இன்றுடன் 25 ஆண்டுகள் பூர்த்தி


இலங்கை கிரிக்கெட் அணி, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் (17) 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி நடைபெற்றது.

அர்ஜூன ரணதுங்கவின் தலைமையிலான இலங்கை குழாத்தில் அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, ரொமெஷ் களுவித்தாரன, அசங்க குருசிங்க, ரொஷான் மஹானாம, ஹஷான் திலகரத்ன, குமார் தர்மசேன, சமிந்த வாஸ் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வெற்றிகொண்ட இலங்கை அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

பாகிஸ்தானின் லாஹூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, 25 வருடங்களுக்கு முன்னர் இதே போன்றதொரு நாளில், பலம் பொருந்திய அவுஸ்திரேலிய அணியை 07 விக்கெட்களால் வெற்றி கொண்டு உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.

No comments

Powered by Blogger.