Header Ads



ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களை ஏப்ரல் 21 க்கு முன் ஆஜர்படுத்தாவிட்டால் நாடளாவிய ஆர்ப்பாட்டம்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரச தவறிவிட்டால் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

தேவ ஆராதணை ஒன்றை அடுத்து மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். 

எந்த சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும், நியாயம் கிடைக்கும் வரையில் மக்களுடன் இருப்பதாகவும், நியாயம் நிலை நாட்டப்படுவதை பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.