Header Ads



ஏப்ரல் 21 தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு, அறிக்கையில் எந்த புதிய விடயமும் உள்வாங்கப்படவில்லை


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்தவொரு புதிய விடயமும் உள்வாங்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் குறிப்பிட்ட விடயங்களே தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.