Header Ads



குவைத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 112 இலங்கையர்களிடம் CID விசாரணை


குவைட் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 112 இலங்கையர்கள் இன்று (25) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். 

கொவிட் தொற்று காரணமாக தாம் பணிபுரிந்த வீடுகளை விட்டு சட்டவிரோதமாக வெளியேறியிருந்த நிலையில் குவைட் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையர்கள் சிலர் இவ்வாறு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

நாட்டிற்கு வருகை தந்த இந்தக் குழுவினர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.