Header Ads



10,000 ரூபாவை விழுங்கிய, பொலிஸ் அதிகாரிக்கு மூச்சுத்திணறல்


கம்பஹா மாவட்ட பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 10 ஆயிரம் ரூபாய் பணத்தை விழுங்கியமையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த பொலிஸ் அதிகாரி போக்குவரத்து சிக்கலை தீர்ப்பதற்காக லஞ்ச பணத்தை பெற்றுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரி அவ்விடத்திற்கு வந்தமையினால் குறித்த பொலிஸ் அதிகாரி 5 ஆயிரம் ரூபாய் பணத்தாள் இரண்டினை விழுங்கியுள்ளார்.

பின்னர் அவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வெலிவேரி பொலிஸ் நிலையத்தியத்தின் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியினால் இந்த பணம் இலஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.