Header Ads



"ஜனாஸா எரிப்பை முஸ்லிம் Mp க்கள் முறையிட்டபோது, இதற்கான முடிவு கிட்டும் என்றார் இம்ரான்கான்"


யூ.எல். மப்றூக் 

இலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை பிற்பகலில் சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் முஸ்லிம் எம்.பிக்கள் முறையிட்டதாக அறிய முடிகிறது.

கொழும்பில் உள்ள ஷாங்ரிலா விடுதியில் பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அதில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பிபிசி தமிழிடம் கூறினார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவது தொடர்பில் இம்ரான் கானிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டபோது, இதற்கான முடிவு கிட்டும் என தம்மிடம் இம்ரான் கான் கூறியதாக முஷாரப் தெரிவித்தார்.

"உடல்கள் பலாத்காரமாகத் தகனம் செய்யப்படும் விவகாரம் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களிடம் தான் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் கூறினார். மேலும் கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை தகனம் செய்வதை முடிவுக்குக் கொண்டு வர தம்முடன் பேசியவர்கள் விருப்பம் கொண்டிருந்ததாகவும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் எனவும் இம்ரான் கான் நம்பிக்கையூட்டினார்" என்றும் முஷாரப் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரையில் நடைபெற்றுள்ளது.

1 comment:

  1. இன்னும் அதே பதில் தானா?

    ReplyDelete

Powered by Blogger.