தோஷத்தை நீக்குவதாக கூறி, பிரம்பால் தாக்கப்பட்ட பாத்திமா றிஸ்கா உயிரிழப்பு - தாய், பூசகர் கைது
குறித்த சிறுமியை அவரது தாயும் கடுமையாக தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தோஷத்தை நீக்குவதாக கூறி பிரம்பால் தாக்கப்பட்ட நிறையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் மீகஹவத்தை - தெல்கொட - கந்துபொட பகுதியில் நேற்று உயிரிழந்தார்.
குறித்த சிறுமியை அவரது பெற்றோர் பூசகர் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
இதன்போது சிறுமிக்கு தோஷம் இருப்பதாக கூறி பூசகர் மற்றும் அவரது தாய் ஆகியோர் பிரம்பால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சிறுமி மயக்கமடைந்த நிலையில் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சம்பவம் தொடர்பில் குறித்த பூசகர், காவல்துறையால் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார்.
இதுபோன்ற முறைசாரா சிகிச்சையின் விளைவாக கடந்த காலங்களில் குழந்தைகள் முதல் முதியோர் வரை உயிரிழந்ததாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே பொது மக்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். Hiru
Hiru TV உட்பட பல பைத்தியம் பிடித்த tele drama கள் தான் இந்த அராஜக கொலை களுக்கு வகை seythullana
ReplyDeleteஇஸ்லாத்தின் வரைமுறைகளை மீறி சென்றால் இதுதான் முடிவு.
ReplyDeleteஅல்லாஹ் எங்கட சமூகத்தை பாதுகாக்க வேண்டும், hiru டிவி முஸ்லிம் எண்டா ஒடனே இப்படி நியூஸ் எல்லாம் போடுவான்
ReplyDeleteபாரம்பரிய முஸ்லீம்கள் என்றாள் இவர்கள் தானா ?? அப்படியென்றாள் இந்த கூட்டத்தாரை தானா??
ReplyDeleteஇலங்கை பௌத்த தெரர்கள் உன்மை முஸ்லீம்கள் என்று அங்கீகரித்துள்ளது???
Cmr(அழ்ழாஹ்வின் அடிமை)என்ன சொல்ல வாரீங்க குண்டு தாக்குதல் நடத்தி தற்கொலை தாக்குதல் நடத்தி அப்பாவிகளை கொல்லும் வஹ்ஹாபிகளையா உன்மை முஸ்லிம்கள் என்று சொல்ல சொல்ரீங்க.
ReplyDelete