இம்ரான் கானுக்கு ஜனாதிபதி, விருந்துபசாரம் வழங்காதது ஏன்..? UNP கேள்வி
கொள்ளுப்பிட்டியில் நேற்று (25) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப், இலங்கை வந்தபோது, அப்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் தனித் தனியே அவருக்கு விருந்துபசாரம் வழங்கினர் .
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தின் பர்வேஷ் முஷாரப் இலங்கை வந்திருந்தபோதும், அவ்வாறே ஜனாதிபதி தனியாகவும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தனியாகவும் விருந்துபசாரம் வழங்கினர் என்றார்.
நாட்டுக்கு வருகைதரும் அரச தலைவர்களுக்கு, இவ்வாறு விருந்தளிப்பது பாராம்பரிய நிகழ்வொன்றாகும் எனக் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் பிரதமருக்கு, பிரதமர் மஹிந்த மாத்திரமே விருந்தளித்துள்ளார் என்றார்.
மேற்படி விருந்துபசாரத்தில் 150 பேர் மாத்திரமே பங்கேற்றுள்ளனர். 200 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு இம்ரான் கானைச் சந்திக்க வாய்ப்பளிக்காமை பிரச்சினைக்குரிய விடயம் எனவும் வஜித அபேவர்தன தெரிவித்தார்.
Imran khan is gentleman.
ReplyDeleteபாகிஸ்தான் உடனான இலங்கை உறவை சிதைத்து முஸ்லிம்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகளை ஆசியாவின் அசிங்கம் இந்தியாவோடு சேர்ந்து ஆரம்பித்தது இந்த நயவஞ்சக unp தான். அதன் தொடர்ச்சியை தான் இந்த அரசாங்கமும் கடைபிடிக்கின்றது
ReplyDeleteIs this the issue???? U people this is why lost all
ReplyDelete