Header Ads



பலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு


- அன்ஸிர் -

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24 ஆம் திகதி நடைபெற்றது.

சந்திப்பில் பங்கேற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்,  தெரிவித்த விடயங்களை இங்கு மிகவும் பொறுப்புடன் சுருக்கித் தருகிறோம்,

இந்தப் பேச்சின் போது, இலங்கை முஸ்லிம்களின் விவகாரம், ஜனாஸா எரிப்பு விவகாரம் என்பன முக்கிய இடத்தை பிடித்திருந்தன.

இதன்போது, ஜனாஸா விவகாரம் குறித்து தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் கதைத்தேன் அவர்களிடமிருந்து சாதக பதில் கிடைத்துள்ளது.

எனினும் இவ்விவகாரங்களை விலாவாரியாக, நாம் ஊடகங்களில் பகிரங்கப்படுத்த தேவையில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் முழு இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இச்சந்திப்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

 Jaffna Muslim இணையம் இச்சந்திப்பு பற்றிய முழு விபரங்களையும் பதிவேற்றுவதை, சில நலன்கருதி தவிர்த்துக் கொள்கிறது.

11 comments:

  1. Dear Jaffana Muslim. it is better to avoid bringing this subject to the media.

    ReplyDelete
  2. yes Jaffna Muslim u r right. Until gazette release much better keep silence.

    ReplyDelete
  3. That's Good News. Let's hope and pray that the President and PM do NOT Waste any more time in implementing the favourable response they have given to PM Imran Khan.

    ReplyDelete
  4. ஜப்னா முஸ்லீம் நல்லது நடந்தால் சரி ஜனாசா எரிக்கப்பட்ட குடும்ப பிரார்த்தனைகள், முஸ்லீம் சமுதாயத்தின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் நல்ல பலனை தருவானென்று எதிர்பாக்கிறான்!இந்த செய்தி மனதுக்கு ஆறுதல் தான் இந்த நேரம் எந்த ஒரு முஸ்லீம் அரசியல் வாதிகளும் என்னால் தான் இது நடந்தது என்று அறிக்கை விடமால் மீடியா முன்னாள் வாய் சொல் வீரனாகாமல் இருந்தால் போதும் ஏனென்றல் முட்டாள் முஸ்லீம் அரசியல் வாதிகளின் செயலால் தான் அரசும் பெரும்பான்மை மக்களும் எங்கள் எதிர்பார்ப்பில் மண்ணை போட பார்க்கிறார்கள்!

    ReplyDelete
  5. ஒன்றும் நடக்காது....

    ReplyDelete
  6. முதல் வக்காலத்து வாங்கும் செலவில் இருந்து நமது சமூகம் விடுபடவேண்டும் இதனால் தான் நம்மை நாமே காட்டி கொடுக்கிறோம்

    ReplyDelete
  7. emathu (Tharu) Thalaiwarhal iwaridam katrukondal sari

    ReplyDelete
  8. Pakistan is a very good friend of Sri Lanka for a long time. Mahinda Rajapaksa and the Rajapaksa brothers are very close friends of Pakistan and PM. Imran Khan. Therefore a good friend will always listen to his good friend than listening to "deceptive, hoodwinking and dishonest" Muslim politicians and Ulema. "The Muslim Voice" is hopefull that, by the grace of God AllMighty Allah, very soon the cremating issue will be resolved as a result of the intervention of Pakistan and PM. Imran Khan during with the Sri Lankan political during hierarchy his official visit to Sri Lanka, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  9. எமது பத்திரிகைகளும் கொக்குபோல் (crane) இருந்து கொள்ள வேண்டும். அதனை JM தொட்ர்ந்து செய்து வருகின்றது. ஆயினும் பதிவுகளை ஏற்றும்போது மாத்திரம் சற்று கூடிய கவனமும் எடுத்தல் சிறப்புக்குரியது.

    ReplyDelete

Powered by Blogger.