அலரி மாளிகை முன்றலில் மாணவர் அமைப்பின் போராட்டம் தொடர்கின்றது
இலவசக் கல்வி தொடர்பான மாணவ அமைப்பு அலரி மாளிகை முன்றலில் நேற்று (08) ஆரம்பித்த போராட்டம் இன்றும் -09- தொடர்கின்றது.
2019 உயர் தர பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த தரப்பினர் தற்போது அலரி மாளிகை முன்றலில் போராட்டத்தை தொடர்ந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment