Header Ads



(வீடியோ) ஜனாஸா அடக்கத்தை பரிந்துரைந்த பேராசிரியர் ஜெனிபரின் அறிக்கையை நடைமுறைப்படுத்துங்கள்

இன்றைய 15.02.2021 ஊடகவியலாளர் மாநாட்டில் மரிக்கார் Mp தெரிவித்தவை, 👉 வீடியோ 👈

SLMC இப்போது மன்னிப்பு கேட்பது பிழையானது. மூன்றில் இரண்டு பெருன்பான்மை உருவாகி ஏகாதிபத்தியம் முன்வருகிறது. அதற்கு அனுமதித்து விட்டு இப்போதே மன்னிப்பு என்பது மீண்டும் மக்களை ஏமாற்றும் செயல். கோவிட் மரணம் என்பது வேறு 20 ஆவது திருத்தம் என்பது வேறு.20 ஆவது திருத்தம் கொள்கை ரீதியானது. முஸ்லிம் சமூகத்திலிருந்து வாக்குகளை பெற்று கட்சி தாவும் படலத்தை ஆரம்பிக்க வேண்டாம். இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.  கட்சியின் தலைவர்கள் இரண்டு போரும் ஐக்கிய மக்கள் சக்தியோடு இருந்து கொண்டு ஏனையவர்களை வாக்களிக்க அனுமதித்துள்ளார்கள். இது என்ன விளையாட்டு. கோவிட் விடயம் இவ்வளவு தூரம் செல்வதற்கு பிரதான காரணம் கோவிட் ஆரம்ப நாட்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வெளியிட்ட முக நூல் பதிவுதான்.  நாங்கள் புதைப்பதற்குரிய உரிமையை முஸ்லிம்களுக்காக மாத்திரம் கேட்க வில்லை. சிங்களவர்களுக்காகவும், கிறிஸ்தவர்களுக்காகவும், பொதுவாக கேட்கிறோம். இந்த மன்னிப்பை நாட்டு மக்களும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு போதும் மன்னிக்காது என்று தெரிவித்தார். காரணம் பல கட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்று எங்களுக்கு உறுதியளித்து இறுதி நேரத்தில் தான் இவர்கள் கட்சி தாவினர்கள்.

1 comment:

  1. SLMC & ACMC Should be dissolved.They went wrong.They have done a historic wrong act to the entire population of all communities.

    ReplyDelete

Powered by Blogger.