Header Ads



குறைந்த கட்டணத்தில் குவைத் - கொழும்பு விமான சேவை


குவைத்தின் சிக்கன வானூர்தி சேவையான ஜெசீரா இலங்கைக்கு தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

குவைத்- கொழும்பு மார்க்கங்களில் இந்த சேவை வாரத்துக்கு இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையில் முழுமையான கோவிட் பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று சேவையின் மேலாளர் ரோஹிட் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த வானூர்தி சேவை செவ்வாய்க்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் குவைத் வானூர்தி தளத்தில் இருந்து காலை 6.45க்கு புறப்பட்டு கொழும்புக்கு பிற்பகல் 2.35க்கு வந்து சேரவுள்ளது.

பின்னர் திங்கட்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் அதிகாலை 3.45க்கு புறப்பட்டு குவைத்துக்கு காலை 7.07க்கு சென்றடையவுள்ளது.

No comments

Powered by Blogger.