Header Ads



கொரோனாக்கு இலங்கையில், முதலாவது தாதி உயிரிழப்பு


(சி.எல்.சிசில்)

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இலங்கையின் முதலாவது தாதி பலியாகியுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

மாவனெல்ல ஆதார வைத்தியசாலையிலேயே கொவிட்-19 தொற்றுக் காரணமாக இலங்கையின் முதலாவது தாதி உயிரிழந்துள்ளார்.

குறித்த தாதி,கண்டி தாதியர் பயிற்சிக் கல்லூரியில் கற்றலைப் பூர்த்தி செய்து 2001ஆம் ஆண்டுமுதல் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் தாதியாக தனது பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

அரச தாதியர் சங்கத்தின் முகநூல் கணக்கிலேயே இது குறித்து குறிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.