Header Ads



ரஞ்சனுக்கு ஆதரவாக, இராஜாங்க அமைச்சரின் அதிரடி கருத்துக்கள்


“இந்த நாட்டில் சிலர் அவர் (ரஞ்சன் ராமநாயக்க) ஒரு மோசமான மனிதர் என்று கூறுகிறார்கள். எனது தனிப்பட்ட கருத்துப்படி, அவர் ஒரு நல்ல மனிதர், அவருடன் நாம் இணைந்திருக்க வேண்டும் / இணைக்க வேண்டும்.

இவ்வாறு வனவிலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை பதியதலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றியபோதே இந்த கருத்துக்களை அவர் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பொய்யுரைப்பவர்களை உற்சாகப்படுத்தவும், யாராவது உண்மையை வெளிப்படையாக பேசுவதைக் கண்டு சிலர் கோபப்படுவார்கள்.

எனது அறிவுப்படி, அவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அவர் நாடாளுமன்றத்திற்கு வெளியே சில விஷயங்களை கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இவற்றை அவர் கூறியிருந்தால், சட்டப்படி எதுவும் செய்ய முடியாது. அவர் சொன்ன சில விஷயங்கள் பாதி உண்மை, சில முற்றிலும் உண்மை. ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.