Header Ads



சட்டவிரோதமாக தகவல் தொடர்பு உபகரணங்களை, இறக்குமதி செய்ததாக ஆங்சான் சூகி மீது குற்றச்சாட்டு


மியன்மார் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி சட்டவிரோதமாக தகவல் தொடர்பு உபகரணங்களை இறக்குமதி செய்ததாக அந்நாட்டு பொலிசார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

மியான்மர் ராணுவத்தின் கீழ் சிறையில் உள்ள ஆங் சான் சூகியை, இறக்குமதி முறைகேடு வழக்கில் 14 நாட்கள் காவலில் வைக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொதுத்தேர்தல் முறைகேடு விவகாரத்தில் மியன்மார் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.

No comments

Powered by Blogger.