Header Ads



பிரதமர் மஹிந்தவுடன் இன்றிரவு, இம்ரான்கான் நேரடிப் பேச்சு (படங்கள்)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து இன்று 2021.02.23 வரவேற்றார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பாகிஸ்தான பிரதமர் இம்ரான் கான் அவர்களை வரவேற்கும் பொருட்டு 19 துப்பாக்கி வேட்டுகள் முழங்கப்பட்டு, இராணுவ மரியாதை அணிவகுப்பொன்றும் இடம்பெற்றது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் அதில் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் விமான நிலையத்தில் சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவு குறிப்பில் (கோல்டன்   புக்) கையெழுத்திட்டார். 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.




No comments

Powered by Blogger.