பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற, உறுப்பினர்கள் ஒர் அமைப்பினை உருவாக்கினர்
அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒர் அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.
மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கும் வகையில் பொதுஜன முன்னணியின் பின்வரிசை உறுப்பினர்கள் இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் இன்று 30 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்து தொடர்பிலும் இதன்போது கட்சியின் சில பின்வரிசை உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு தொடர்பில் சில அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்த நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ச ஆகியோருடன் இந்த அமைப்பினர் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இது தொடர்பிலான கடிதமொன்றிலும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த கோரிக்கை கடிதம் இன்றைய தினம் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post a Comment