Header Ads



ஆசிரியர் அறைந்ததில் காது, கேட்காமல் போன மாணவனுக்கு நஷ்ட ஈடு


மாத்தறை பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் அறைந்ததில் காது கேட்காமல் போன மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 650,000 ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதில் 150,000 ரூபாவினை மாணவனை தாக்கிய ஆசிரியரும் எஞ்சிய 500,000 ரூபாவினை அரசாங்கமும் வழங்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாத்தறை, புகுள்வெல்ல மத்திய மகா வித்தியாலயத்தின் 15 வயது மாணவனே இவ்வாறு ஆசிரியரின் தாக்குலில் காது கேட்கும் திறனை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. அது " அறைந்ததில் " என்று வரவேண்டும். எத்தனை எழுத்துப் பிழைகள்.

    ReplyDelete
  2. இதுவெல்லாம் ஒரு தொகையா

    ReplyDelete

Powered by Blogger.