Header Ads



எச்சரிக்கை கடிதத்தை அடுத்து, அந்தோனியார் தேவாலய பாதுகாப்பு அதிகரிப்பு


(சி.எல்.சிசில்)

அநாமதேய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றதையடுத்தது கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார்  தேவாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொது இடங்களைத் தாக்கத் தயாராகி வருவதாக தேவாலய நிர்வாகத்துக்கு கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றதையடுத்து கடந்த 10ஆம் திகதி கடலோர பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புலனாய்வுத் துறையினரால் விசாரணை முடுக்கி விடப்பட்டதில் பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக யாரோ ஒருவர் இதைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.