Header Ads



ரணில் மீது தளர்வு, மைத்திரி மீது கடுமை - கண்டிக்கிறது சு.க.


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தளர்வான கொள்கை பின்பற்றப்பட்டுள்ளதோடு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்பில் கடுமையான கொள்கைள் பின்பற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்று வெளியிட்டு அந்தக் குழு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.