Header Ads



ஈஸ்டர் தாக்குதல் காலப்பகுதியில் 6,000 வாள்கள் இறக்குமதி - பேராயரின் மனுவை விசாரிக்க தீர்மானம்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்கு இறக்குதி செய்யப்பட்டதாகக் கூறப்படும், 6,000 வாள்கள் தொடர்பில், முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை,  மார்ச் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்போது, இந்த விடயம் தொடர்பாக  இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என,  பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.