வீட்டில் உறங்கியவரை தாக்கி, கழுத்தை கட்டி 5 இலட்சம் பெறுமதியான தங்க சங்கிலி கொள்ளை
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நபரொருவரை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி அவரின் கழுத்தை கட்டி சுமார் 5 இலட்சம் பெறுமதியான தங்க சங்கிலியொன்று கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று அம்பலாங்கொடை திலகபுர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இன்று -10- அதிகாலை நேரத்தில் வீட்டினுள் நுழைந்த சிலரால் குறித்த தாக்குதல் மற்றும் கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் என தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் இடம்பெறும் போது அவரின் மகள் மற்றும் மனைவி வீட்டில் இருந்துள்ளனர்.
கொள்ளையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவரின் மகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த குழுவினர் வீட்டினுள் நுழைவதற்கு முன்னதாக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவை சேதப்படுத்தியுள்ளதை காணக்கூடியாக உள்ளது.
காயமடைந்த விற்பனை நிலைய உரிமையாளர் கராபிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment