Header Ads



அதிவேக வீதியூடாக போதைப்பொருள் கடத்தல் - இன்று 54 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது


அதிவேக வீதி ஊடாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருள் கடத்தல் ​தொடர்பில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொள்ளையிடப்படும் பொருட்கள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் அதிவேக வீதியூடாக கொண்டு செல்லப்படுவதாக தொடர்ச்சியாக தகவல்கள் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தெற்கு அதிவேக வீதியூடாக வாகனமொன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியின் அங்குனுகொலபெலஸ்ஸ நுழைவாயில் பகுதியில், முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது 54 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திஸ்ஸமகாராம பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.