382 கிராம் ஹெரோயின் வைத்திருந்து, விற்பனை செய்தவருக்கு மரண தண்டனை
382 கிராம் 3 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காலி மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று(12) பிறப்பித்துள்ளது.
அக்மீமன பொலிஸ் பிரிவில் குருந்துவத்தை கோனாமுல்ல பகுதியை சேரந்த சுதத் நிஷாந்த என்ற 51 வயது நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment