Header Ads



12 ஆம் திகதி வரை பொறுத்திருக்குமாறு, பாராளுமன்ற செயலாளருக்கு நீதிமன்று உத்தரவு


(சி.எல்.சிசில்)

நீதிமன்ற அவமதிப்பு குற்றம் காரணமாக சிறைவாசம் அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனத்துக்கு இந்த மாதம் 12ஆம் திகதி வரை நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்று பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாயக்க தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.