Header Ads



103 வயதுடைய பெண், கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணம்


103 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார். 

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அதிக வயதுடையவர் இவரென தெரிவிக்கப்படுகிறது. 

காலி கிரிமங்கொட பிரதேசத்தை சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் கடந்த 06 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். 

பின்னர் அவரது சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்க எடுத்துச் செல்லப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது, அவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருந்தமை தெரிய வந்துள்ளதாக காலி மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரியந்த டி சில்வா குறிப்பிட்டார். 

அதன்படி, அவரின் பூதவுடல் தொடர்பான இறுதிக்கிரியைகள் தடல்ல தகனசாலையில் நேற்று இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.