Header Ads



தேவாலயம் அருகில் PCR பரிசோதனை - 9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா


கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் 9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின்போதே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தேவாலயத்திற்கு அருகில் மேலும் 50க்கும் அதிகமான அருட்தந்தையர்கள் வசிப்பதாக கொழும்பு மாநகர சபை பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

அதேபோல் மட்டக்குளி பிரதேசத்தில் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் 9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மேலும் 50 க்கும் அதிகமான சகோதர அருட்தந்தையர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலைமை காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளுக்கு செல்லும் போது பொதுமக்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அருட்தந்தையர்களுக்கு தேவாலயத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நகராட்சி மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.