Header Ads



போலிச் செய்தியை பதிந்தவர் கைது - விளக்கமறியலிலும் வைக்கப்பட்டார்


(சி.எல்.சிசில்)

போலிச் செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிந்த பிலியந்தலவைச் சேர்ந்த ஒருவர் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

இந்தப் பதிவு இன, மத குழுக்களிடையே தவறான எண்ணங்களுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

போலிப் பதிவுகளை ஆய்வு செய்யும் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நேற்று மாலை சந்தேக நபரை பிலியந்தலையில் கைது செய்ததாகவும் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் இன்று ஹல்ஸ்ட்ரோப் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது பெப்ரவரி 2ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.

No comments

Powered by Blogger.